படகுகள் சேதமடைவதை தடுக்க
கடல் அலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்




சென்னை:

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில், புயல் - மழை காலங்களின் போது கடலலை தடுப்புச் சுவர் இல்லாத நிலையில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் சேதமடைகிறது. இதைத் தடுக்க மேற்கூறிய மீன்பிடித் துறைமுகங்களில் கடலலை தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் கடலலை தடுப்புச்சுவர் அமைத்துத்தரப்படும் கூறினார்.