தமிழக அரசியலில்
திருமாவளவனின் அபார வளர்ச்சி!
அரசியல்வாதிகளை
திரும்பி பார்க்க வைக்கிறது..!



தொல் திருமாவளவன் தமிழக அரசியலில் ஒரு புதிய சித்தாந்தத்தை தோற்றுவித்து தான் சார்ந்த சமூகத்தை தாண்டி பொதுமக்களின் ஆதரவையும் சிறுபான்மை, பெருபான்மை சமுதாயத்தின் நட்பையும் பெறுகின்ற வகையில் தனது அரசியல் கட்டமைப்பை உருவாக்கி திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளில் அங்கம் வகித்தாலும் தனது தனிதுவத்தை தூக்கி நிறுத்தும் வகையில் தனி சின்னத்தில் போட்டியிடும் அளவிற்கு நம்பிக்கையோடு தமிழக அரசியலில் களத்தில் நிற்கிறார். தான் பிறந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மட்டும் ஒரு இயக்கம் செயல்பட்டால் அது நிர்ணயித்த இலக்கை எட்டுவதற்கு நீண்ட நெடுங்காலம் ஆகும் என்பதை உணர்ந்துக் கொண்டு தனது வேகமான வளர்ச்சிக்கு எத்தகைய வழிகள் நமக்கு ஏற்றவை என்பதை உணர்ந்து புரிந்துக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் என்ற ஒரு இயக்கத்தை தோற்றுவித்து அதில் அனைத்து சமுதாய மக்களின் ஆதரவை பெறுகூடிய அமைப்பாக உருவாக்க வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் திமுக கூட்டணியில் தேர்தலை சந்திந்த பொழுது அந்த கூட்டணியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெற்றிப்பெற செய்து அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிப்பெற்று இருந்தாலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்தவராகவும், இன்னொரு சட்டமன்ற உறுப்பினர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெற்றிப் பெற வைத்து இன்றைக்கு பெரும்பான்மை சமுதாயத்தில நம்பிக்கை ஏற்படுவதற்கு அரசியலில் தனக்கு என்று இடத்தை தக்கவைத்து கொள்வதற்கு, சிறுபான்மை மக்கள் பிரச்சனைகளுக்கு தான் சார்ந்த அடையாளத்தை இழந்து விடாமல் உயர்த்தி பிடித்துக் கொண்டு அனைத்து அரசியல்கட்சி தலைவர்களுடனும் நட்புடன் பழனி நம்பகத்தன்மையுடன் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் தொல் திருமாவளவன்.

இவரது செயல்பாடுகளும் நாடாளுமன்ற உரைகளும் சட்டமன்றத்தில் இவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்புகின்ற குரல் ஒலியும் இந்திய அளவில் பேசப்படும் ஒரு செய்தியாக பார்க்கப்படுவதுடன் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் அடையாளமாகவும், எங்கெல்லாம் அநீதி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் முதலில் தோன்றுகின்ற மனிதராக களத்தில் நின்று பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கின்ற ஒரு உயர்ந்த நெறியுடன் தனது அரசியல் பயணத்தை திட்டமிட்டு செயலாற்று வருகின்றார். இவரது கடின உழைப்பும் மாற்று கட்சியினரின் நட்பும் தோழமை கட்சிகளோடு இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பும், பட்டியலின மக்களை மேல் நிலைக்கு கொண்டு வருவதற்கு வேகமாக உதவி வருகிறது என்றால் அது மிகையில்லை. குறிப்பாக பட்டியலின மக்களுக்கு பல தரப்பட்ட பல தலைவர்கள் இருந்தாலும் அதில் ஒருசிலரை தவிர மற்றவர்களெல்லாம் மின்னலை போல் தோன்றி மறைந்து விடுகிறார்கள். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தவும், தவறி விடுகிறார்கள். ஆனால் தொல் திருமாவளவன் அவர்கள் தன்னை வாய்ப்புகள் தேடி வருகின்ற அளவிற்கு தன்னையும் தன் அமைப்பையும் வளர்த்து வருவதில் அதன் மூலம் வெற்றி பெறுவதிலும் அதிக ஆர்வத்துடன் செயலாற்றுவதில் தொல் திருமாவளனுக்கு தொல் திருமாவளவனே சாட்சியாக நிற்கிறார்.

பட்டியலின மக்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவே தொல் திருமாவளவன் விளங்குகிறார். இல்லற வாழ்க்கையை துறந்து பொதுவாழ்க்கையில் முன்னேற்ற அடைய வேண்டும் என்ற இவரது முயற்சிக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். தமிழுக்கும் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் இவர் என்றும் உரக்க குரல் எழுப்புவதில் அந்த கொள்கையை உயர்த்தி பிடிப்பதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்.    

- டெல்லிகுருஜி