தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல்!
தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தரமணியில் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.7.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுத் தலமாகச் செயல்படவிருக்கும் “தமிழ் அறிவு வளாகம்” (Tamil Knowledge Campus) கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சிந்துவெளி ஆய்வு மையம், பொதுவியல் ஆய்வு மையம் ஆகியவை இவ்வளாகத்தில் முக்கிய அங்கங்களாகும். இதற்கான மொத்தக் கட்டுமான செலவு 40 கோடி ரூபாய் ஆகும். தமிழ்நாடு அரசு, தமிழ்கூறும் நல்லுலகத்தின் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், புரவலர்கள் உதவியுடன் இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- தொ