அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக-வை பணிய வைத்தார்
தேசிய திராவிட முற்போக்கு கழகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. அப்பொழுது வாய்மொழி உத்தரவாக நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவி தருவதாக எடப்பாடி பழனிசாமி அவர்களும் மற்றும் மூத்த நிர்வாகிகளும் உறுதி அளித்ததாக பிரேமலதா விஜயகாந்த் பொதுவெளியில் கூறிவந்தார். நாடாளுமன்ற தேர்தலில் 2024&ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறவில்லை என்றாலும் அந்த கூட்டணி மரியாதைக்குரிய அணியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது.
தேர்தலுக்குப் பின் பிரேமலதா விஜயகாந்த் அரசியல் செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் அதன் நம்பகத்தன்மைக்கு மாறாக அமைந்து இருந்ததால், சுதாகரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாடா-ளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவி தருவதற்கு தயக்கம் காட்டினார். ஒரு வேளை மேல்சபை எம்பி பதவியை பெற்றுக் கொண்டு கூட்டணி மாறுவதற்கும், தயாராகி விடுவார் என்ற தகவல் எடப்பாடியாருக்கு தெரிய வந்ததால் பதவி தருவதற்கு மனமில்லாமல் நிராகரித்து விட்டார். அதே நேரம் 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் நீடித்தால் ஒரு நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவி தருவதாக கூறி தன் வாக்குறுதியை உறுதி செய்துள்ளார் அதிமுக துணைப் பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி மூலமாக அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இருந்தும் தேமுதிக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கடலூரில் நடைபெறும் மாநாட்டில் ஜனவரி மாதம் (2026) அன்று அறிவிப்பதாக செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.