கௌரவம் பார்க்கும் நேரம் அல்ல..
இழப்பதற்கு ஒன்றுமில்லை…
அன்புமணிக்கு வழிகாட்டுங்கள்!
டாக்டர் ராமதாஸ் கௌரவம் பார்க்காமல் தன் மகன் டாக்டர் அன்புமணியுடன் இலக்கமான போக்கை மேற்கொண்டு சமூக நீதியை காப்பதற்காகவும், சமதர்ம சமுதாயத்தை உருவாக்கவும், தான் ஒரு போராளி என்பதை மனதிலே நிறுத்திக் கொண்டு பாமக கட்சியின் எதிர்காலம் நன்மையை கருதி கட்சியின் வளர்ச்சிக்கு தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் கூறிக்கொண்டு விலகி நின்று டாக்டர் அன்புமணி அவர்களுக்கு நல்வழியை காட்டுவதற்கு தன்னை அசுவாசப்படுத்திக் கொள்ளவே சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.
பாமக கட்சிக்குள் பிளவு என்ற ஒன்றை ஏற்படுத்தும் விதமாக பொதுவெளியில் பேசுவதற்கு டாக்டர் இராமதாஸ் காரணமாக இருந்து விட கூடாது. எப்படி சத்தியத்தை மீறி அன்புமணியின் வளர்ச்சியில் அக்கறையோடு செயல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக்கி, மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தீர்களோ அதே போன்றதொரு நிலையையும் இந்த தருணத்தில் மனமுவந்து மேற்கொள்வது சாள சிறந்ததாகும். அன்புமணி மீதுள்ள தவிர்க்க முடியாத பாசத்தை வெளிப்படுத்திய தாங்கள் மகன் குறித்த குடும்ப பிரச்சனைகளை பொது வெளியில் வெளியிடும் பத்திரிகையாளர் மத்தியிலும், பகிரங்கமாக வெளியிட்டு குற்றம் சுமத்துவது என்பது பாட்டாளிகளின் மனதை எந்த அளவிற்கு புண்படுத்தும் என்பதையும், நோக அடிக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்து இத்தகைய செயல்களில் தவிர்த்து விடுவது எதிர்கால நன்மைக்கு உகந்ததாகும்.