பயணம் குறுகியது!


ஒருவர் பேருந்தில் ஏறும் பொழுது அறியாமல் கால் பட்டதாக அதை மற்றொரு நபர் அடித்தார். அந்த நபர் அமைதியாக இருந்த பொழுது அருகில் இருந்த பெண் அவர் உங்கள் கைகளால் அடித்த பொழுது ஏன் துவார் செய்யவில்லை என கேட்டார். அந்த மனிதர் அதற்கு புன்னகையுடன் பதிலளித்தார். எனது பயணம் மிக குறுகியதாக இருப்பதால் முக்கியமற்றை ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன். இந்த பதில் மிகவும் அந்த பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது. மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். இவ்வுலகில் நமது நேரம் மிகவும் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். பயணற்ற வாக்குவாதங்கள் பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் கோபம், ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் ஆபத்தானது.


யாராவது உங்கள் மனதை காயம்படுத்தினார்களா? அமைதியாக இருக்கவும். யாராவது உங்களை காட்டிக் கொடுத்தார்களா? மிரட்டினார்களா? ஏமாற்றினார்களா? அல்லது அவமானப்படுத்தினார்களா அமைதியாக ஓய்வெடுங்கள். மன அழுத்தத்திற்கு ஆளாகதிர்கள். நம் பயணம் மிகவும் குறுகியது. உங்களுக்கு பிடிக்காத கருத்தை யாராவது கூறினார்களா? அமைதியாக இருக்கவும். உங்கள் மனதில் அவர்களை நினைத்து எந்த காரணம் இல்லாமல் இன்னும் அவர்களை நேசிக்கவும். நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. 

நாளை என்பது யாருக்கும் தெரியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்பது தெரியாது. நாம் ஒன்றாக பயணம் செய்வது என்பது மிக குறைவு. நண்பரையும் குடும்பத்தினரையும் பாராட்டுவோம். அவர்களை நல்ல நகைச்சுவையுடன் வைத்திருங்கள். அவர்களை மதிக்கவும் மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் இருப்போம் ஏனென்றால் நம் பயணம் மிக குறுகியது.

- டெல்லிகுருஜி