உள்ளூர் மொழிகளை
வழக்காடு மொழியாக்க நடவடிக்கை-
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா



சிறு வயதில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடந்த மொழிப் போராட்டம் நன்கு நினைவில் உள்ளது. மொழி- கலாச்சாரத்தை காப்பாற்றுவதில் தமிழர்கள் முன்னணியில் உள்ளனர். துரித உணவுகளை போல் மக்கள் துரிதமான நீதியையும் எதிர்பார்க்கிறார்கள்.

பில்டர் காபியில் இருந்து, இன்ஸ்டன்ட் காபிக்கு மக்கள் மாறிவிட்டனர். காலங்கள் மாறிவிட்டது. 5 நாள் கிரிக்கெட்டில் இருந்து 20-20 கிரிக்கெட்டுக்கு மக்கள் மாறிவிட்டனர். தமிழ்நாடு பார் கவுன்சில்தான் நீதித்துறையின் அனைத்து விவகாரங்களையும் முதலில் முன்னெடுத்து செல்கிறது.

சமூக உண்மையை நீதிபதிகள் உணர்ந்து இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும்போது கண்மூடி சட்டத்தை மட்டும் நீதிபதிகள் சார்ந்திருக்கக் கூடாது. மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.

நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நீதித்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் நீதித்துறையில் வருவதற்கு மொழி, இனம், சாதி, மதம், என எதுவும் தடையாக இருக்கக்கூடாது. பின்தங்கிய பகுதியில் இருந்து வரும் நீதிபதிகளால்தான் மக்கள் பிரச்சினைகளை புரிந்து தீர்க்க முடியும்.