திருமாவளவன் பிறந்த நாள்
வேல்முருகன் புகழுரை!




விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன், திருமாவளவன் அவர்களை பாராட்டி வாழ்த்தி பேசியதோடு விடுதலை சிறுத்தைகள் பண்ருட்டி தொகுதியில் ஆற்றிய தேர்தல் பணியில் மிக சிறப்பாக பாராட்டியதோடு எதிர்காலத்தில் நீங்கள் பண்ருட்டி தொகுதியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு என்னை வெற்றிப்பெற செய்தது போல் எல்லா தொகுதிகளிலும் தொல்.திருமாவளவன் அவர்களின் பின்னால் நின்று ஒரே அணியாக திரண்டு நீங்கள் தேர்தல் பணியாற்றினால் அரசியல் அதிகாரத்தை சுலபமாக கைப்பற்றலாம் என்று ஆலோசனையும் வழங்கிய பண்ருட்டி வேல்முருகன் (எல்.எல்.ஏ), விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிறுபான்மை சமுதாய மக்கள் நலனிலும் அக்கறையோடு இருந்து செயல்படுவதாக கூறியுள்ளார். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் இளைஞர்கள் தொல்.திருமாவளவன் அவர்களோடு இருந்து பணியாற்றுவது தமிழக வளர்ச்சிக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்று கூறினார். ஆதி திராவிடர்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லீம், கிறிஸ்துவர், வன்னியர்கள் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்பதை மனதில் வைத்து நம்மை பிரிக்கும் சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


திருமாவளவன் பிறந்த நாளில் சிறந்து உரையாற்றிய பண்ருட்டி வேல்முருகனை விடுதலை சிறுத்தைகள் பாராட்டுவதுடன் தொல்திருமாவளவனும் பாராட்டி மகிழ்ந்தார்.